மங்கியதொரு நிலவினிலே …..

அதிதி இங்கு வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது .விடியல் இல்லாத இரவும் எலும்பையும் ஊடுருவும் குளிரும் அவளுக்கு புதிது .பயண அலுப்பில் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று அவளுக்கே தெரியாது .எழுந்ததும் கடிகாரத்தை பார்த்தபோது மணி இரண்டு என்று இருந்தது மதியம் இரண்டா இல்லை நடுநிசி இரண்டா என்று புரியவில்லை.வெளிய சென்று பார்த்தாலும் சந்தேகம் தீராது ஏனெனில் இது ஸ்வல்பர்ட் .பசி வயிற்றை கிள்ளியது அறையை விட்டு வெளியே வந்ததும் ஜார்லின் அம்மா சமையல் அடுக்கில் ஏதோ செய்து கொண்டிருந்தார் .அவரது முகத்தில் ஒரு புன்னகை .ருஷ்ய மொழி மற்றும் நோர்விஜியன் மொழி மட்டுமே அறிந்தவர் என்பதால் புன்னகை மற்றும் உடல்மொழியை கொண்டு பேச முயற்சி செய்தார். அவர் ,சாப்பிட ஏதாவது வேண்டுமா ?என்று கேட்டதற்கு அதிதியும் தலையை ஆட்டவே அவர் சூடாக செய்த lappskojs கிண்ணத்தில் ஊற்றி கொடுத்தார்.இதில் என்ன சேர்த்து இருக்கிறீர்?என்று அதிதி கேட்டதற்கு .அவர் திக்கி திணறி உருளைக்கிழங்கு ,கேரட் மற்றும் இறைச்சி சேர்த்து தயாரிக்கப்பட்ட ஸ்டியு என்று விளக்கமளித்தார் .அதற்குள் மரக்கட்டைகளை வண்டியிலிருந்து இறக்கி அடுக்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஜார்ல் .

தூக்கம் போதுமா? என்று அதிதியிடம் கேட்டுவிட்டு இந்த அறை வசதியாக இல்லாவிட்டால் வெளியே தங்குமிடம் ஏற்பாடு செய்துதருவதாக சொன்னான் .அதிதி “நான் தங்குவது உங்களுக்கு சிரமம் இல்லையெனில் நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன்” என்றாள் . அப்போதுதான் அந்த வீட்டை சுற்றிப்பார்த்தாள் .ஒரு சிறிய ரான்ச் ஹவுஸ் .வீட்டின் இடது புறத்தில் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது .பின் புறத்தில் பன்றிகள் ,கோழிகள் தங்கும் பண்ணை .அவள் அன்று வரை ஏழு எட்டு ஹஸ்கி நாய்களை ஒன்றாக பார்த்ததில்லை .பார்த்து அதிசயத்துப் போனாள் .வீட்டில் மூன்று அறைகள் வந்ததிலிருந்து ஜார்லின் தந்தையை மட்டும் இன்னும் பார்க்கவேயில்லை.

ஆங்காங்கே ஜார்லின் கைவண்ணம் அழகாக ஓவியமாய் காட்சியளித்தது .அனைத்தும் ஸ்வல்பர்டின் இயற்கை எழில் .அவோவியங்களை ஏற்கனவே அவள் பார்த்ததுதான் .அவளுக்கு மெயிலில் பகிர்ந்து இருக்கிறான் .அடுத்து அவளது கவனத்தை ஈர்த்தது புத்தக அலமாரி .புத்தகங்கள் ஆங்கிலத்தில் இல்லாவிடிலும் அது என்ன புத்தகங்கள் என்று புரிந்துகொண்டாள் அதுவும் அவன் அவளுக்கு பரிந்துரை செய்த நோர்விஜியென் புத்தகங்கள் .இவள் படித்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை .”இது naive super தான ?நீ பரிந்துரை செய்ததில் எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம் இதுதான் .லியோ எர்லாண்ட் என் கண்ணை திறந்துட்டார் “என்றாள் .

“சரி நான் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு செல்கிறேன் .உனக்கு ஏதாவது வேண்டுமா?”ஜார்ல் கேட்டதும் தானும் வருவதாக கூறி அவனுடன் சென்றாள் .

வண்டியை அணைக்காமல் சாவியையும் வண்டியிலேயே விட்டுவிட்டு கடைக்குள் சென்றவனிடம் ,”வண்டியை யாரும் எடுத்து சென்று விட்டால் அல்லது வண்டிக்குள் இருக்கும் உன்னோட கிட்டார் மற்றும் துப்பாக்கியை யாரும் எடுக்கமாட்டார்களா ?”என்று கேட்டாள் .

“எங்க ஊரில் திருடனும் இல்லை சிறைச்சாலையும் இல்லை” என்றான் அமைதியாக .

“எனக்கு குழந்தைகள் படிக்கும் பேண்டஸி உலகில் இருப்பது போல் இருக்கிறது உன் ஊர் .எல்லோரும் நல்லவர்கள்,தேவைக்கு மேல் யாரிடமும் எதுவும் இல்லை.ஒரே அமைதி ….”என்று புன்னகைத்தாள் அதிதி .

“அப்படிலாம் இல்லை …எங்கள் ஊரில் பிறக்க மட்டும் தன் உரிமை இருக்கிறது சாக இல்லை .65 வயதிற்கு மேல் இங்கு வாழ உரிமை இல்லை அதுபோல் உடல் நிலை சரியில்லை என்றால் பக்கத்தில் உள்ள ஊருக்கு சென்றுவிட வேண்டும் .”

“ஏன் ?”

“இங்கு புதைக்கப்படும் உடல் மக்காது .அதனால் தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது .மனிதர்கள் அனைவரும் தான் பிறந்த வாழ்ந்த மண்ணில்தான் சாக வேண்டும் என்று நினைப்பான் அதுவும் இந்த அமைதியான எழில்பொங்கும் இடத்தில் கடைசி நாட்களை நாங்கள் கழிக்க முடியாது “

இருவரும் பொருட்களுடன் திரும்பினர் .”நாளை நீ ஆவலுடன் எதிர்பார்த்த சன் பெஸ்டிவல்,நீ தூங்கு காலையில் பார்க்கலாம்” என்று உணவு சாப்பிட்டபின் ஜார்ல் கூற அதிதி அறைக்கு சென்றாள் .

தன தந்தைக்கு அலைபேசியில் பேசிவிட்டு கணினியில் அதுவரை அவளும் ஜார்லும் பகிர்ந்த மெயிலை பார்த்தாள் தன்னுடைய கூறிய விழிகளால் உற்று உற்று அந்த ஓவியத்தைப் பார்த்தபின் அதற்கு கீழே அவ் வோவியத்திற்கு ஏற்றவாறு மேற்கோள் காட்டப்பட்ட கவிதை வரிகளைத் திரும்ப திரும்ப படித்தாள்.

டியர் அதிதி ,

என்னோட ஊரை பற்றி கேட்டிருந்தை .என்னோட ஓவியத்தில் நீ பார்க்கலாம் ….

January2020highlights Canvas Print featuring the photograph Polar Bear Pair Looking Upwards, Svalbard, Norway by Danny Green / Naturepl.com

Cold frost and sunshine: day of wonder!
But you, my friend, are still in slumber –
Wake up, my beauty, time belies:
You dormant eyes, I beg you, broaden
Toward the northerly Aurora,
As though a northern star arise!

Recall last night, the snow was whirling,
Across the sky, the haze was twirling,
The moon, as though a pale dye,
Emerged with yellow through faint clouds.
And there you sat, immersed in doubts,
And now, – just take a look outside:

The room is lit with amber light.
And bursting, popping in delight
Hot stove still rattles in a fray.
While it is nice to hear its clatter,
Perhaps, we should command to saddle
A fervent mare into the sleight?

Alexandr Pushkin

டியர் ஜார்ல் ,

ஒவ்வொரு முறையும் உன் ஓவியத்தையும் அதற்கு உயிர் கொடுக்க நீ தேர்ந்தெடுக்கும் கவிதையும் உன் ஊரை நான் காணும் ஆவலை அதிகப்படுத்துகிறது . உன் ஒவ்வொரு கடிதத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டது பல .நீ சென்ற கடிதத்தில் அனுப்பிய புத்தக விவரங்கள் சுவாரசியமாக இருந்தது .சில புத்தகங்களை ஆர்டர் செய்துள்ளேன் .Henrik Ibsen இதுவரை நான் படிக்காத ஒரு எழுத்தாளர். A Doll’s House ,அவருடைய இந்த படைப்பு தாகூரின் கதைகள் போல இருக்கும் என்று நம்புகிறேன் .நம்முடைய இந்த நட்பு தொடங்கி ஒரு வருட காலம் ஆகி விட்டது .எப்படி தொடங்கியது என்று உனக்கு நினைவிருக்கிறதா ?

உன் அன்பு தோழி ,

அதிதி கார்த்திகேயன்.

கடிதத்தை மறுபடியும் படித்து ஒருவருடமாக நடந்ததை அசைபோட்டபின் தூங்கிப்போனாள் .

அதிதி கார்த்திகேயன் ஷீதல் மற்றும் கார்த்திகேயன் தம்பதியருக்கு ஒரே மகள் .அப்பாவிடமிருந்து தமிழையும் அம்மாவிடமிருந்து ஹிந்தி மொழியையும் கற்றுக்கொண்டதோடு பெற்றோரிடமிருந்து எப்படி வாழ கூடாது என்றும் கற்றவள் .அவள் வீட்டில் அவள் அதிகம் கேட்டதும் பார்த்ததும் ரிசர்ச் ,பையோடெக்னாலஜி ,நானோடெக்னாலஜி ,தீசிஸ் ,கானபெரென்ஸ் ஆம் அவளது பெற்றோர் இருவரும் IIT யில் பேராசிரியர்கள் .அதனால் சிறுவயது முதல் அவளுக்கு தனிமையைப் போக்கிய உற்ற தோழன் புத்தகங்கள் .அதுவே அவள் பின்னாளில் தேர்ந்தெடுத்த படிப்பாகவும் மாறியது .பி .ஏ ஆங்கிலம் ஸ்ட st .stephens college ,புதுடில்லியில் படித்தாள் அதற்கு பின் முதுகலைப் படிப்பை பெங்களூரில் உள்ள கிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தாள் .தற்போது ஒரு பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராக பகுதி நேர வேலையோடு மேற்படிப்பையும் படித்து கொண்டு இருக்கிறாள் .

மறுநாள் காலை அவள் எழுந்தபோதே வானம் வழக்கத்திற்குமாறாக கொஞ்ச வெளிச்சத்தை காண்பிப்பதை போல் இருந்தது .வந்த மூன்று நாட்களிலே சூரியனை காணாமல் நமக்கு இப்படி இருக்கிறதே எப்படி நான்கு மாதங்கள் இருட்டில் இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது .ஜார்ளிடம் எப்போது சூரிய உதயத்தை பார்க்க செல்வோம் என்றாள் .இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்ப்பாய் என்றான் .ஜார்லின் அம்மா சன் பெஸ்டிவலுக்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக solboller என்ற இனிப்பை தயார் செய்து கொண்டிருந்தார்.வட்டமாக கஸ்டர்டு கிரீம் நிரப்பப்பட்ட இனிப்பை சுவைக்க ஆசையா என்று கண்களாலே கேட்டார் ஜார்லின் அம்மா .

இனிப்பை சுவைத்ததோடல்லாமல் அதை செய்வதற்கும் கொஞ்சம் உதவியை செய்து விட்டு எல்லோரும் சர்ச்சிற்கு கிளம்பினார்கள் .ஆண்டு குழந்தைகள் சூரியனைப் போல் உடை அணிந்து தங்கள் முகத்திலும் சூரியனை வரைந்துகொண்டு அழகாக குழுமி இருந்தனர் .இதோ இன்னும் சில நொடிகளில் வெளியே வரப்போகிறேன் என்பதைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக தலையை எட்டிப்பார்த்தது சூரிய குழந்தை.அங்கு இருந்த ஒரு வயதான ஜோடி கண்களில் நீர் ததும்ப அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தை பார்த்து கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாள் அதிதி .அடுத்த சூர்ய உதயத்தை பார்க்க நாம் இருப்போமா என்பதுதான் அவர்களின் கேள்வி ..

ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்படும் இதை காணவே அதிதி மார்ச் மாதம் வர திட்டமிட்டாள் .ஜார்ள்க்கு ஒரு விஷயம் அதிதியிடம் புதிதாக இருந்தது அவள் சுற்றலாவிற்காக வரும் மற்றவர்களை போல் புகைப்படங்களை எடுத்து தள்ளவில்லை .வீடியோ பதிவுகளை செய்வதும் செல்பி எடுப்பதும் என்று அந்த தருணத்தை அனுபவிக்க தெரியாத மனிதர்களை அதிகம் கண்டவனுக்கு இவள் தன கண்களால் காட்சிகளை பதிவு செய்து மனதில் சேவ் செய்வது பிடித்திருந்தது.அவள் தினமும் ஜௌர்னல் எழுதுவது மட்டுமே அவளின் இந்த பயணத்தின் பதிவு .

ஜார்ல் :”எப்படி இருக்கிறது இந்த அனுபவம் ?”

அதிதி :என்னோட ஊரில் நான் சூரிய உதயத்தை பார்க்க நினைத்ததே இல்லை அது தினமும் நிகழும் என்பதாலோ என்னவோ ..சூரியன் வந்தபின்தான் எழுவேன் .சூரியனின் அருமை தெரிந்து கொண்டேன்.எதுவும் இருக்கும்போது அதன் மதிப்பு தெரிவதில்லை .இங்கே நீங்கள் அனைவரும் பிரசவ விடுதியின் முன் குழந்தையை காண காத்திருப்பவர் போல காத்திருப்பது பார்ப்பதற்கு அரிய காட்சியாக உள்ளது .

ஜார்ல் :அடுத்த முறை அக்டோபர் மதம் வா அப்போதுதான் சூரியனின் அஸ்தமனத்தை பார்க்கலாம் .

அதிதி :எப்படி இனி தூங்க போகிறேன் இந்த வெளிச்சத்தில் என்று தெரியவில்லை

ஜார்ல் :இரண்டு வாரம் உனக்கு புது அனுபவமாக இருக்கும்

வீட்டிற்கு திரும்பியவர்கள் அவர் அவர் வேலையில் மூழ்கிப்போனார்கள் .அதிதி சில கட்டுரைகளை மொழிபெயர்க்கும் வேலையில் இருந்தாள் .ஜார்ல் அன்று மாலை ஒரு இசை கச்சேரிக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் .

மாலை அதிதியும் அந்த கான்செர்ட்க்கு சென்றாள் அந்த நாளிற்கு ஏற்றார் போல ‘HERE COMES THE SUN ‘ என்ற Beatles பாடலை பாடினார்கள் .அப்போது ஏர்போர்ட்டிலிருந்து வீடு வர ஜார்லின் காரில் ஏறியதும் காரிலிருந்த துப்பாக்கியை பார்த்து பயந்தது .துப்பாக்கியையும் அவனையும் மாறி மாறி பார்த்ததும் அவனே அது பனிக்கரடியிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் வைத்திருக்கும் பொருள் என்று விளக்கமளித்ததை நினைத்து சிரித்தாள் .

அந்த இரவு வெளிச்சத்தின் காரணமாக தூங்க இயலாமல் தன தந்தையிடம் பார்த்த அனைத்தையும் பகிர்ந்துவிட்டு கணினியை வழக்கம் போல் நாடினாள் .மெயில் பாக்ஸ் சென்றாள்

டியர் அதிதி ,

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது உன்னுடைய பதிவை நான் முதன்முதலில் நம்முடைய வேர்ல்ட் லிட்ரேச்சர் குரூப்பில் பார்த்து உனக்கு பதிலளித்தேன் .என்னுடைய பதிவிற்கு உன்னுடைய விமர்சனம் வித்தியாசமாகவும் நான் சிந்திக்காத கோணத்திலிருக்கும் .நீ பகிர்ந்த அந்த கவிதை சூரியோதயத்தைப் பற்றியது நான் அப்போது வருத்தமாக நான் சூரியோதயத்தை எங்கள் ஊரில் காண 120 நாட்கள் காத்திருக்கவேண்டும் என்று பதிவிட்டேன் .அப்போதுதான் நீ என்னுடைய ஊரை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாய் .நம்முடைய நட்பு சூரியோதயத்தோடு இனிதே தொடங்கியது .இத்தோடு நீ அறிய விரும்பிய ஸ்வல்பர்ட் தானிய சேகரிப்பு இடத்தை பற்றிய ஒரு கவிதையை இணைத்துளேன் .இதை எழுதியவர் தியான வூட்காக்

என்றும் உன் நண்பன் ,

ஜார்ல்

.

Svalbard Global Seed Vault

Outside Longyearbyen, eight hundred
miles from the North Pole, scientists,
counting and envisioning the cost
of past and future disasters—even
Syria’s civil war—Aleppo’s seed bank
destroyed by bombing 2015—

have tucked into a mountainside,
ensured in permafrost, ample space
for four and a half billion critical
crop seeds worldwide. If the worst
should happen, this backup collection
will safeguard vegetation.

Or is it all mere speculation—
no place feasible but the hereafter.
But how to disentangle ourselves
from earthly (Arctic) time and space?
Standing in front of the entrance
to the doomsday seed vault,

something about it putting a halt
to doubt, I began envisioning
what the seeds are all about.
Was it too late to practice faith?
Dalal from Kuwait had brought
seeds from her desert home,

assuming she could contribute
them right there and then.
Tottering on the threshold
of before and after, I prayed
for faith as small as that biblical
mustard seed. Immerse myself,

I coaxed, in the hope of seeds,
that someday planted,
they can reverse the damage.
Feeling a thirst for roots,
recalling the burning bush—
how thorns and thistles are not

the earth’s original natural fruit—
I wished upon a seed deposited
just then in the scat of that snow
bunting warbling and hunting
insects beside the mountain stream
flowing past the global seed vault,

toward the sea, under the midnight sun.

Diana woodcock

அன்புள்ள ஜார்ல் ,

கொஞ்ச தாமதமாக கடிதம் எழுதுவதற்கு மன்னிக்கவும் .பரீட்சை மாறும் வேலை பளு காரணமாக எழுத முடியவில்லை .குளிர்காலம் நீண்ட இரவுகள் எப்படி சமாளிக்கிறாய்? சில நாட்களாக குழுவில் உன்னோட ஓவியம் ஏதும் பார்க்கமுடியவில்லை .விரைவில் பகிரவும் .நான் இந்தவருடம் ஸ்வல்பர்ட் வரலாம் என்று நினைக்கிறன் .நீ கூறியதைப் போல அந்த சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் .நீண்ட இரவு எப்படி இருக்கும் என்பதை உணர வேண்டும்.பனி கரடிகளை நேரில் காண வேண்டும் .உலகமே அழிந்தாலும் மீண்டும் பூமியை உயிர்ப்பிக்க மனிதனுக்கு தேவையான விதைகளை சேமித்து வைத்திருக்கும் அந்த இடத்தை காண வேண்டும்.ஹஸ்க்கியுடன் ஸ்லேட்டிங் செய்ய வேண்டும் .

அன்பு ஸ்நேகிதி ,

அதிதி கார்த்திகேயன்.

இன்று அதிதி காண வந்திருக்கும் இடம் ஒரு ஏரி .கண்களுக்கு ரம்யமான ஒரு இடம் அந்த சூரியனோடு அதை காண இரு விழிகள் போதாது .ஜார்ளிடம் அவளுக்கு பிடித்த ஒரு விடயம் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றால் வழ வழ வென்று அந்த இடத்தைப்பற்றி கூறுகிறேன் என்று பேசமாட்டான் .அமைதியை களைக்காமல் ரசிக்க விடுவான் .அதிதி தன்னுடைய அலைபேசியில் ஒரு பாடலை இயர் போன் போட்டுகொண்டு கேட்டாள் .தில் பேச்சரே படத்தில் வரும் மைன் தும்ஹரா பாடல் .கண்களை திறந்து அந்த சூரியனை பருகியபடி அந்த பாடலோடு ஐக்யமானாள் .

ஜார்லிடம் இந்த பாடலை கேட்டு பார்க்கிறாயா என்று கேட்டாள் அவனை தனித்து விட்டுவிட்டோமோ என்று நினைவிற்கு வந்ததும் .

அந்த பாடலை கேட்டவன் உண்மையில் சொற்களற்று போனான் .”எனக்கு புரியாத மொழி என்றாலும் என் ஆன்மாவை தொட்டது .இசைக்கு மொழி தேவை இல்லைதானே!” என்றான் .

மியூசிக் யாரு என்னோட தலைவன் ARR ஆச்சே என்றாள் சிரித்துக்கொண்டே .அடுத்தடுத்த நாட்கள் ஸ்வல்பர்ட் ஸீட் வால்ட் ,பிஷ்ஷிங் என்று சென்றது .அவள் உடல் கொஞ்சம் திடீர் பகல் இரவு மாற்றம் தட்பவெட்ப மாற்றத்தால் பசி மட்டும் தூக்கம் அற்று இருந்தது .ஜார்ள்க்கு அவர்கள் வீடு உணவு அவளுக்கு பிடிக்கவில்லையோ என்று தோன்றியதால் சாப்பிட வெளிய அழைத்து சென்றான் .Barentsburg நகரில் மீன் உணவிற்கு பெயர் போன Rijpsburg உணவகத்திற்கு அழைத்து சென்றான்.மீன் அதிதியின் பிடித்த உணவு என்பதை அறிந்தே அங்கு சென்றார்கள்.barentsburg நகரில் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வாழ்வதால் அங்கு அமெரிக்கா ,பிரிட்டன் ,போர்துகீஸ் என்று அணைத்து வகையான உணவகமும் இங்கு இருக்கிறது .அதிதி மீனையும் ஜார்ல் ஸ்குவிடையும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர் .

அதிதி “உன் அப்பா எங்க ?”என்று அமைதியை களைத்தாள் .

“அப்பாவிற்கு 65 வயது ஆகிவிட்டது கொஞ்சம் உடல்நல சிக்கல் இருக்கிறது அதனால் இங்கு வாழ அனுமதி இல்லை .என் அண்ணனோடு ஓஸ்மாவில் பேக்கரி ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் .அம்மா பண்ணையை விட்டு செல்ல இயலாமல் இங்கு இருக்கிறார் .”

“நீ இந்த இடத்தில்தான் வாழ போகிறாயா ?” சந்தேகத்துடன் கேட்டாள் ,”பெற்றோரை பிரிந்து அவர்கள் வயதான காலத்தில் இருப்பது கஷ்டம்தான் “

“on our earth we can love truly only with suffering and through suffering !”என்றான்

“இங்க இப்போ எதுக்கு டாஸ்டாவ்ஸ்க்கிய கூப்பிட்ட “என்று

ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது.ஒரு விதமான புது உணர்வு மகிழ்ச்சியா ? சோகமா ?தெரியவில்லை .ஜார்லின் அம்மாவை கட்டிஅணைத்து நன்றி கூறினாள் .இந்தியாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி காரில் ஏறினாள் .காரில் சிறிது மௌனத்திற்கு பின் ஜார்ல் “எப்படி வெறும் கடிதத்தில் பழக்கம் ஆனா என்னை நம்பி கண்டம் தாண்டி வந்தாய் ?”

அதிதி “என்னோட instinct என்னைக்கும் தப்பா போகாது …நம்ம இருவருக்கும் பொதுவானது எது இலக்கியம் .இலக்கியத்தை ரசிப்பவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக போலி முகமூடி அணியாதவராகத்தான் இருக்க முடியும் .இப்ப இந்த கேள்வியை கூட நீ என் மேல் இருக்கும் அக்கறையில் தன் கேட்குறேன்னு தெரியுது பயப்படாத நான் கண்ணை மூடிக்கொண்டு யாரையும் நம்பமாட்டேன் “என்று சொன்னாள் .

ஏர்ப்போர்டும் வந்தது நோர்வே சென்றதும் குறுந்செய்தி அனுப்ப சொன்னனான் .”டெல்லி சென்றதும் கால் பண்ணு .அடுத்து எப்போ சந்திப்போம் என்று தெரியாது .எங்கள் ஊரின் அமைதி உனது வாழ்விலும் இருக்கட்டும் “என்றான்.

எங்கள் நாட்டில் நிறைந்து இருக்கும் வண்ணங்கள் உனது ஓவியத்திலும் நிறையட்டும் என்று கூறி ” கிளம்பினாள் மறக்க முடியாத இனிய நினைவுகளுடன் .

-Madhuneeka Suresh

3 thoughts on “மங்கியதொரு நிலவினிலே …..”

    1. உங்கள் கதையைப் படித்தபோது, ஒரு ஓவியத்தை ரசித்ததுபோலவும் இருந்தது. தகவல் செறிவும் நிறைய இருந்தது. நடை வழுக்கிச் சென்றது. கதைக்களன் புதிது, ஆனால் மதுவின் கைவண்ணம் வழக்கம் போல் ஏமாற்றவில்லை.

Comments are closed.